கோவை ராம்நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ராமர் கோவிலில் மழை வேண்டி "வருண ஜபம்" என்னும் சிறப்பு பூஜை பிரம்மஸ்ரீ விசுவநாத கணபாடிகள், பிரம்மஸ்ரீ சுந்தர் வாத்தியார் தலைமையில் கே.ஜெகன் உள்ளிட்டோரின் ஏற்பாட்டில் நடைபெற்று வருகிறது.

இன்று காலை 7.30 மணியளவில் துவங்கிய இச்சிறப்பு பிராத்தனை வழிபாடு இன்று மாலை 6.30 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த வழிபாட்டில் ல் ரிக்வேதம், எஜுர்வேதம், சாமவேத 70 பண்டிதர்கள் மற்றும் திறளான பக்தர்கள் பங்கேற்று கூட்டு பிரார்த்தணையில் ஈடுபட்டு வருகின்றனர்.